பிரிவு

 




உன் பெயரைச் சொல்லி  

சிரிக்கின்றன நிமிடங்கள்,  

அதன் ஒலியில்  

என் மனம் உடைந்து  

உன் வருகைக்காகக் காத்திருக்கிறது.


உன் தெய்வீகப் பாதங்கள்  

நினைவின் வழியாக  

என் பக்கம் வருமோ என  

காற்று திசையைக் கேட்டு  

விண்ணில் பார்வை செலுத்துகிறேன்.


மழைத்துளிகள் எல்லாம்  

உன் நினைவுகள் மண்ணில் விழுந்து  

புரழ்வதுபோல் நானும்  

உன் அன்பின் தரிசனத்திற்காக  

மண்வழியாகவே சென்று கொண்டிருக்கிறேன்.



பிரிவு என்னும்  

துயரத்தின் சாயலே  

உன் பாசத்தின் நிறமாக  

எனை நிரப்புகிறது,  

அவனது அழகிய முகம்  

அழகாய் காட்சியளிக்கிறது.


உன் முகத்திலே  

என் நெஞ்சம் தஞ்சமடைய  

நட்சத்திரங்களின் ஒளியில்  

எனது மனசு நிழலாடுகிறது,  

நீ திரும்பி வருவாய்

என்று எப்போதும் உனை எதிர்பார்க்கிறேன்.



நீ விலகிச் சென்ற பின்னும்  

உன் சுவடுகள் மட்டும்  

வீட்டின் ஒவ்வொரு மூலையும் தழுவுகிறது,  

உன் சிரிப்பின் இசை மட்டும்  

என் காதுகளின் ஓரமாக  

சிறகடித்துப் பறக்கிறது.


இரவில், விண்ணில்  

நட்சத்திரங்களைக் கண்டு  

உன்னைக் கற்பனை செய்ய,  

அந்த நட்சத்திரங்களும்  

உனக்காக புன்னகைக்கின்றன.


நமக்கிடையில் உள்ள  

இந்த வெற்றிடத்தின் உள்ளே  

நினைவுகள் மட்டும் நிரம்பி  

நீயின்றி வறண்டிருக்கிறது மனம்.


நீ திரும்பிப் பார்க்கும் நாள் வருமா  

என்று எண்ணிக்கொண்டே

நாட்களும்  நேரமும்  

என் கண்ணிலிருந்து  

வழுக்கி ஒடுகின்றன.


பிரிவு வலியின் கரை இல்லா கடலாய்

நம் பாசத்தின் ஆழத்தை  

ஒவ்வொரு அலைக்கும்  

புதுமையாக உணர்த்துகிறது.

Comments

Popular posts from this blog

செயற்கை புன்னகை

மழலை.

அவனைக் கண்டதும்......