மழலை.
சினம் கூட
பெருகி வரும்
புன்னகை பிஞ்சில்!
உற்சாகம் கூட
சரிந்து விடுகிறது
குழந்தையின் கோபத்தில்!
விரக்தி கூட
அழுகையை காண்கையில்
காணாமல் போகிறது!
கனவுகள் கூட
நனவாகும்
மழலையின் கூக்குரலில்!
சோர்வு கூட
தொலைந்து போகிறது
அழகு தழுவும் கண்களில்!
முடிவுகள் கூட
மென்மையான
குழந்தையின் ஓசையில்!
அர்த்தங்கள் கூட
தொலைந்து விடுகின்றன
அதிகாரபூர்வமான உறவுகளில்!
Comments
Post a Comment